#விழுப்புரம் | தந்தைக்கு சாராயம் கொடுத்து, சிறுமியை காதல் வலைவீசி சீரழித்த நாடக காதல் குரூப்ஸ்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் : மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்த பிரதாப் (வயது 22) என்பவன், அதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, மாணவியின் தந்தைக்கு சாராயம் கொடுத்துவிட்டு வீடு புகுந்து, மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

இதனையறிந்த அவனின் நண்பன் களிக்குப்பத்தை சேர்ந்த புவனேஸ் (வயது 21), மாணவியிடம் நைசாக பேசி, காதல் வலைவீசி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இருவரும் மாணவியின் வீட்டுக்கு தனித்தனியாக வந்து செல்வதை பார்த்த கிராம மக்களுக்கு நடந்த சம்பவங்கள் தெரியவரவே, மனம் உடைந்த அந்த மாணவி நேற்று இரவு வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நடந்த சம்பவங்கள் குறித்து மாணவியின் தந்தை மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vilupuram marakkanam school girl abuse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->