தவறான உறவில் இருந்த ரௌடி... பிறப்புறுப்பை சின்னாபின்னமாக சிதைத்து, வெறித்தனம் காண்பித்த கணவன்.!
Viluppuram Rowdy Murder by Man Due to Affair With His Wife 14 December 2020
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் வடக்கு இரயில்வே காலனி பகுதியை சார்ந்தவர் விஜி. விஜி அப்பகுதியில் ரௌடியாக வளம் வந்த நிலையில், அவரின் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், விஜிக்கு அப்பகுதியை சார்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த தகவல் பெண்ணின் கணவர் சிலம்பரசனுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிலம்பரசன் இருவரையும் எச்சரித்த நிலையில், இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் கடுமையான ஆத்திரத்திற்கு சென்ற சிலம்பரசன், குடித்துவிட்டு மதுபோதையில் விஜியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக முற்றியுள்ள நிலையில், சிலம்பரசன் தான் எடுத்து வந்த கத்தியை எடுத்து விஜியை குத்தியுள்ளார். ஆத்திரம் தீராமல் விஜியின் பிறப்புறுப்பை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்துபோன விஜி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இந்த காட்சிகளை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்த காவல் துறையினர், விஜியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிலம்பரசனை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். இதன்போது, விஜி தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால், அவரை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Viluppuram Rowdy Murder by Man Due to Affair With His Wife 14 December 2020