அதிகாலை ஆரம்பித்த அதிரடி சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பிரபு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபு அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்பு துறை துறையை ஏவி விட்டு சோதனையை மேற்கொண்டு இருக்கும் விடியா தி.மு.க அரசின் இந்த செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vigilance raid EPS condemns


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->