நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய  வேல்முருகன்! - Seithipunal
Seithipunal


ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனை முதியோர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கும் செலவு செய்கிறார். சூட்டிங் நடத்துவதில்லை ஷோ நடத்துவதில்லை என நடிகர் விஜய்யை மறைமுகமாக வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை,பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது ,தேன்கனிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வர வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்? ஒரு பேருந்துக்கு 70 ஆயிரம் ரூபாய். வரும் 60 பேருக்கும் சாப்பாடு. மூன்று வேளை கட்டுசோறு கட்ட வேண்டும். இவற்றையெல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு வந்து தமிழ்நாட்டின் வாழ்வுரிமை சிக்கல்களுக்கு இங்கே அமர்ந்திருக்கிற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் தான் இந்த மண்ணின் வளம், உரிமைக்காக களம் கண்டாரே தவிர, எந்த ரசிகனும் களம் காணவில்லை. எந்த கதாநாயகனும் களம் காணவில்லை. ஆனால் இந்த உண்மையை உடைத்து பேசுகின்ற போது பல பேருக்கு ஆத்திரம் பொங்குகிறது. இன்றைக்குக் கூட பள்ளி மாணவர்களை விட்டு எனக்கு பதில் சொல்ல சொல்கிறார்கள். பாவம். நாங்கள் தற்குரியாம். 

எங்களை சொல்லுகின்ற தற்குறிகளுக்கு சொல்லுகிறோம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வரலாற்றை, வேல்முருகன் டி என்கின்ற பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்... கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, தெரிந்து கொள்ளுங்கள் தற்குறிகளே.. படித்து புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் இன்று கேள்வி கேட்கிறார்கள் தற்குறிகளும் தருதலைகளும் வேல்முருகன் யார் என்று? நீங்கள் எல்லாம் சினிமாவில் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட பொழுது அரைகுறை ஆடைகளோடு ஆடிக்கொண்டிருந்த பொழுது, தமிழர்களுக்காக களம் கண்ட தமிழ்நாடு விடுதலைப் படையில் பணியாற்றியவன் வேல்முருகன். இந்த கூட்டத்தின் வாயிலாக தற்குறிகளும் தருதலைகளும் கேட்டுவிட்டு நேரடியாக வாருங்கள். நான் ஒருவரை அழைக்கிறேன்.. 

ஒன்னே முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன். இந்த தமிழ் சமூகம் எந்த அளவிற்கு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சினிமாத்துறை எவ்வளவு சீரழிந்து இருக்கிறது. சின்னத்திரை எவ்வளவு சீரழிந்து இருக்கிறது. டிக் டாக் என்ற பெயரில் எவ்வளவு சீரழிந்து இருக்கிறது. வாங்க நேரடியா பேசுவோம். விவாதிப்போம். அதை விட்டுவிட்டு இவர்கள்தான் மாணவர்களை என்கரேஜ் பண்றாங்களாம். இவங்கதான் பரிசு கொடுக்கிறார்களா. தமிழ்நாட்டில் பாலா என்கின்ற சாதாரண நடிகன் துணை நடிகன் கதாநாயகன் இல்லை. தான் சம்பாதித்த பணத்தை முழுவதையுமே ஆதரவற்றவர்களுக்கு அளிக்கிறார். வீடு கட்டி கொடுப்பதோடு கல்வி கட்டணத்தையும் செலுத்துகிறார். சூட்டிங் வைக்கிறது இல்ல ஷோ நடத்துவதில்லை. 
அஜய் பவுண்டேஷன் ஷோ நடத்துறதில்ல ஷூட்டிங் நடக்கிறது இல்லை. ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனை முதியோர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கும் செலவு செய்கிறார். சூட்டிங் நடத்துவதில்லை ஷோ நடத்துவதில்லை. 

அரசியலுக்கு வாருங்கள் மக்களோடு நில்லுங்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக களம் காணுங்கள். 55 வயதாகும் நான் 45 ஆண்டுகள் போராடி இருக்கிறேன். களத்தில் நின்றிருக்கிறேன். நான் சந்திக்காத இந்திய அரசியல் அமைப்புகளில் எந்த பிரிவுகளும் இல்லை...என அவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் குறித்து விமர்சித்து, சவால் விடும் விதமாக கடுமையாக தாக்கி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Velmurugan speaks indirectly attacking actor Vijay


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->