குடியாத்தம்: குடிக்க பணம் தராத மூதாட்டி எரித்துக்கொலை... மனசாட்சி இல்லாமல் அடகுக்கடையில் நகை விற்பனை முயற்சி.! - Seithipunal
Seithipunal


சாராயம் குடிக்க காசு தராத மூதாட்டியை கொடூரன் ஒருவன் எரித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பெருமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகு மணி மூதாட்டி. ரகுமணி மூதாட்டியிடம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாராயம் குடிக்க காசு கேட்டு தகராறு செய்துள்ளார். 

இந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், கொடூரன் ரகு மணியை மூதாட்டி என்றும் பாராது, அவரை அடித்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளான். பின்னர் காவல்துறையினரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில், மூதாட்டியை தீவைத்து எரித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த காவல் துறையினர், மூதாட்டியின் மூக்கில் கிடந்த மூக்குத்தி மாயமாகியுள்ளதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, மூக்குத்தியை அடகு வைக்க வந்த குமாரை, கையும் களவுமாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Gudiyatham Aged Woman Ragu Mani Murder by Drunken Culprit Police Arrest 24 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->