'தமிழர்களின் வழிபாட்டில் சிவலிங்கத்தை வணங்கவில்லை' - வி.சி.க திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை." என்று பேசி இருந்தார். இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இன்று இல்லை என்று கூற முடியும் என்று பேசி வருகின்றனர். 

தற்போது இவருடைய கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்போது ராஜராஜசோழன் எந்த மதத்தை சார்ந்தவர். அவரின் வழிபாடு என்ன என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தமிழர்களின் உருவ வழிபாடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "வழிபாடுகள் மூவகை: உருவ வழிபாடு (சிலை/நபர்), அருவ வழிபாடு (தம்மம்/வாழ்வியல் நெறி), அருவுருவ வழிபாடு (லிங்கம்) அருவுருவம் என்பதில்  உருவமுண்டு. எனினும் மெய், வாய், கண், மூக்கு, செவி  இருக்காது. அதுவே லிங்க வழிபாடு. எனவே, அது சிவனை மட்டுமே குறிக்காது. தம்மத்தையும் குறிக்கும்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Thirumavalavan tweet about tamilans prayer


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->