கிருஷ்ணகிரி: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.! பெண் உயிரிழப்பு.!
Van overturned accident in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20-க்கும் அதிகமானோர் உறவினர் வீட்டு திருமணத்திறகாக வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது சேலம் நெடுஞ்சாலையில் வேனை, லாரி ஒன்று முந்தி சென்றுள்ளது.
இதையடுத்து வேன் ஓட்டுநர், லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Van overturned accident in kirishnagiri