கட்டுமான பணியின் போது நேர்ந்த விபரீதம்: மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்கள்.!
Uthakai landslide occurred Workers buried
உதகை, மரவியல் பூங்கா முன் நடைபெற்று வந்த கட்டுமான பணியின் போது திடீரென மண் சரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் புதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மண்ணுக்குள் புதைந்த இரண்டு பேரையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மற்றொருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
Uthakai landslide occurred Workers buried