காதலுக்கு கண் இல்லை.. காமத்திற்கு மனசாட்சிகூட இல்லை.. திருச்சியை உலுக்கிய கோர சம்பவம்.!
unknown women rapped by 5 persons in trichy
திருச்சியில் ஊர் பெயர் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிவார். அங்கிருப்பவர்கள் அவரை மெரி என்று அழைப்பார்கள். யாராவது உணவு கொடுத்தால், சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிவிடுவார்.
சமீபகாலமாக அவருக்கு உணவு கொடுக்க தேடிய பொழுது, அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஒருநாள் காலை மயங்கிய நிலையில் அவர் வெகு நேரமாக எழுந்துருக்க முடியாமல் அங்கே கிடந்துள்ளார். பின்னர், சமையல் மாஸ்டர் ஆன கார்த்திக் என்பவர் ஓடி வந்து பார்த்த பொழுது ரத்த கீறல்களுடன் மேரி கிடந்துள்ளார்.
அவர் அரை மயக்கத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தது. மேலும், ஆட்டோவில் சிலர் அதுபோலவே அரை மயக்கத்தில் இருந்து உள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து இழுத்தபோது, ஆட்டோவில் ஏறி பறந்து விட்டனர்.
பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, மேரியை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் விசாரணை நடத்தியதில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை 5 பேர் ஆட்டோவில் அழைத்துச் சென்று கற்பழித்து இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
unknown women rapped by 5 persons in trichy