ஊரெங்கும் தடையற்ற குடிநீர்...! ரூ.288.97 கோடியில் மெகா திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு...!
Uninterrupted drinking water throughout city Tamil Nadu government announced mega project worth 288point97 crore
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து, வறண்ட வானிலை தொடர்ந்து நிலவி வருவதால் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் பல்வேறு நீராதாரங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இதனால், பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில், தேவையான குடிநீர் விநியோகப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள குடிநீர் தொடர்பான பணிகளை விரைவாக நிறைவு செய்வதுடன், அவசரமாக மேற்கொள்ள வேண்டிய புதிய பணிகளையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.288.97 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீராக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும், இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் 2026-2027-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி மதிப்பீட்டில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைவு மற்றும் வறண்ட வானிலை காரணமாக பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.வறட்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு தேவைக்கேற்ப குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Uninterrupted drinking water throughout city Tamil Nadu government announced mega project worth 288point97 crore