உலக வெப்பநிலை 1.5°C உயரும் என ஐ.நா. எச்சரிக்கை: பேரழிவுகளைத் தடுப்பதே முதன்மை சவால்!
UN Warns Global Temperatures Will Exceed 1 C Above Pre-Industrial Levels Urges Immediate Action to Prevent Catastrophes
அடுத்த சில ஆண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் (1.5°C) அதிகரித்துவிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக பூமி மேன்மேலும் வெப்பமடைந்து வரும் சூழலில், வரவிருக்கும் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதே சர்வதேச சமூகத்தின் முதன்மை இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டமான 1850 முதல் 1900 வரையிலான ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலை 13.7°C முதல் 13.9°C ஆக இருந்தது. தற்போது கணிக்கப்பட்டுள்ளபடி வெப்பநிலை 1.5°C அதிகரிக்கும் பட்சத்தில், பூமியின் சராசரி வெப்பநிலை 15°C-க்கு மேல், அதாவது 15.2°C முதல் 15.4°C என்ற ஆபத்தான நிலைக்கு உயரும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புவி வெப்பநிலை இவ்வாறு தொடர்ந்து உயருமானால், உலகெங்கிலும் கடும் வறட்சி, தீவிர வெப்ப அலைகள், பெருவெள்ளப் பெருக்குகள் மற்றும் கடல்மட்டம் உயர்வு போன்ற இயற்கைச் சீற்றங்களின் ஆபத்து பெருமளவில் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதகுலத்திற்கும் இயற்கைச் சூழலுக்கும் ஏற்படும் பேரழிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, பூமியின் வெப்பநிலையை இதற்கு மேல் உயர விடாமல் தடுப்பதே தற்போதைய மிக முக்கியச் சவாலாக உருவெடுத்துள்ளது.
English Summary
UN Warns Global Temperatures Will Exceed 1 C Above Pre-Industrial Levels Urges Immediate Action to Prevent Catastrophes