இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம்(45) மற்றும் மலையாண்டி(55) ஆகிய இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில், மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தனர். சிவலிங்கம் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.

அப்பொழுது மதுரை, பொன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்த நல்லான் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சிவலிங்கம் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் நல்லான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்த நிலையில் சிவலிங்கம் மற்றும் மலையாண்டி ஆகிய இரண்டு பேரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவலிங்கம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheelers accident in Sivagangai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->