இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஜெகன். இவரது மகன் பிரேம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று வளர்புரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அரக்கோணம்-சென்னை நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பிரேம்குமார் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler lorry accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->