அரியலூரில் பரபரப்பு - போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக நிர்வாகிகள் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் பரபரப்பு - போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக நிர்வாகிகள் கைது.!

அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அஸ்வினாபுரம் பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க கட்சியின் நிர்வாகி மணிமாறன் மற்றும் பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் நகை அடமானம் வைப்பதற்காக வந்துள்ளனர். 

அதில், மணிகண்டன் மற்றும் மணிமாறன் உள்ளிட்ட இருவரும் வங்கிக்குள் சென்று நகை மதிப்பீட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர். ரமேஷ் வங்கிக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். இதையடுத்து மதிப்பீட்டாளர் அவர்கள் கொடுத்த நகைகளின் உண்மை தன்மையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அது போலி நகை என்பது தெரிய வந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் வங்கிக்கு விரைந்து  போலி நகையை அடமானம் வைக்க வந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மணிமாறன் உள்ளிட்ட இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். 

இதற்கிடையே போலீஸ் ஜீப் வருவதை கண்ட ரமேஷ் அங்கிருந்தது தப்பி சென்றுவிட்டார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two tmtk supporters arrested for duplicate gold mortgage in ariyalur


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->