மதுரையில் கொடூர விபத்து - 10 மாத குழந்தையின் கண்முன்னே பறிபோன தாய் உயிர்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் கொடூர விபத்து - 10 மாத குழந்தையின் கண்முன்னே பறிபோன தாய் உயிர்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த இரண்டு  ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பணிகள் குறித்து எந்த விதமான அறிவிப்போ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை. 

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் என்பவர் தனது நண்பரின் இல்ல விஷேஷத்திற்காக ராஜபாளையம் நோக்கி தனது காரில் குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது இந்தக் கார் எதிர்பாராத விதமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹானஸ்ட்ராஜின் மனைவி மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த பவானியின் பத்து மாத கை குழந்தை, ஹானஸ்ராஜ் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட மூன்று பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். 

இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் உயிரிழந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died for car accident in madurai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->