திருப்பூர் அருகே கொடூரம் - இசைநிகழ்ச்சி பார்க்கச் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.!
two peoples arrested for harassment in tirupur vellakovil
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் பகுதியில் அமைந்துள்ள வீரக்குமாரசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தத் திருவிழாவை முன்னிட்டு இசைக் கச்சேரி நடைபெற்றது. இதனைப் பார்ப்பதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயாருடன் வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து வௌ்ளகோவில் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவரிடம் அவரது தாயார் விசாரணை நடத்திய போது, அந்த மாணவி தன்னை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் தொழிலாளிகளான வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற கல்லூரி மாணவி பலோப்பியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for harassment in tirupur vellakovil