சேலம் || 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவர்கள் வெறிச்செயல்.!
two boys arrested for harassment in salem
சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். பின்னர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியின் கண்களை துணியால் கட்டி கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை மற்றொரு சிறுவன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதேபோன்று, பலமுறை அந்த சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனே அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இற்றாண்டு சிறுவர்கள் மீதும் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த 2 சிறுவர்களையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
English Summary
two boys arrested for harassment in salem