மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டியூசன் ஆசிரியர் கைது!
Tuition teacher arrested for sexually harassing student
கன்னியாகுமரி மாவட்டம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து கொண்டேதான் செல்கிறது,கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்த 41 வயதான மகேஷ் என்பவர் தனது வீட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். இந்தநிலையில் அங்கு டியூசன் படிக்கும் கருங்கல் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு டியூசன் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவி, அவரது சகோதரர் உள்பட ஏராளமானோருக்கு ஆசிரியர் மகேஷ் பாடங்கள் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் 7-ம் வகுப்பு மாணவியை மட்டும் தனி அறைக்கு ஆசிரியர் மகேஷ் அழைத்துச் சென்று திடீரென மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன மாணவி பதற்றத்துடன் கூச்சலிட் சகோதரர் அந்த அறைக்கு ஓடிச் சென்று தங்கையிடம் அத்துமீறிய ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து டியூசனில் நடந்த மோசமான சம்பவத்தை அவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரைபோலீசார் கைது செய்தனர். கைதான மகேசுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tuition teacher arrested for sexually harassing student