பாதுகாப்பு இல்லாத பார்களை மூட வேண்டும்... அரசுக்கு டி.டி.வி கடும் கண்டனம்.!
TTV Dhinakaran condemned TN govt
சென்னை, ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த தனியார் மதுபான கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் நேர கட்டுப்பாடு இன்றி செயல்படும் மதுபானக்கூடங்களை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் இயங்கி வரும் மதுபான கூடத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதால் இன்று தொழிலாளர்களின் உயிர் பறிபோகிவிட்டது.
மக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் பார்க்காமல் பாதுகாப்பு வசதி இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மற்றும் உயிரிழப்புக்கு காரணமான மதுபான கூட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
TTV Dhinakaran condemned TN govt