வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டி.டி.எஃப் வாசன் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே தாமல் என்ற இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல யூடியூபரும், மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த டி.டி.எஃப் வாசன் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதோடு வீலிங் சாகசத்திலும் ஈடுபட்டார். 

அப்போது நிலைபடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்வதாக கூறி அவருடைய நண்பர் அபீஸ் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து டி.டி.எஃப் வாசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை டி.டி.எஃப் வாசன் அவரது நண்பர் அபீஸ் வீட்டில் வைத்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டி.டி.எஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTF Vasan arrested for wheeling accident near Kanchipuram


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->