#BigBreaking | திருச்சியில் ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு! இருவர் மருத்துவமனையில் சிகிச்சை! - Seithipunal
Seithipunal


திருச்சி, உறையூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

திருச்சியில் நடந்த ஒரு நகை கொள்ளை சம்பந்தமாக போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில், இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது போலீசார் தங்களின் உயிரை தற்காத்துக் கொள்ளும் வகையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

நகை திருட்டு வழக்கில் கைதான இருவரையும், நகையை மீட்பதற்காக உறையூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே இருவரையும் ஜீப் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, இருவரும் ஜீப்பிலிருந்து போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்று உள்ளனர்.

மேலும் போலீசார் மீது இருவரும் கொடூரமான ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இடத்தை போலீசார் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இருவரையும் வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy police gun fire rowdy


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->