17 வயது சிறுமி கடத்தல்... வாலிபர் உட்பட 8 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியிடம் ராஜேஷ் என்பவன் பழகி வந்ததாக தெரியவருகிறது. மேலும், சிறுமியிடம் இருக்கும் சொத்திற்கு ஆசைப்பட்டு, உறவினரான ராஜேஷ் பழகி வந்துள்ளான். 

சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமாகிய நிலையில், பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். 

இதன்போது ராஜேஷ் சிறுமியிடம் திருமண ஆசைகாண்பித்து கடத்தி சென்றது தெரியவந்த நிலையில், துறையூரை சார்ந்த ராஜேஷ் உட்பட 8 பேரை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Child Kidnapped by Relation Want Land Property 10 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->