அதிவேகமாக வந்த கார்.. சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே உள்ள நடைபாதையில் யாசகர்கள் 3 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. மேலும், 3 பேரின் உயிரிழப்புக்க காரணமான காரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy accident 3 peoples death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->