வீட்டிற்குள் உறங்க சென்ற சிறுமியின் விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.!!
Trichy 15 year old girl suicide police investigation
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சின்னசமுத்திரம் பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகளின் பெயர் உதயதர்ஷினி (வயது 15). இவர் அங்குள்ள மரவனூர் தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வு நுழைவுசீட்டு வாங்க கூறி மாணவர்களுக்கு முதலில் அறிவுறுத்தப்பட்ட நிலையில், தனது தந்தையுடன் பள்ளிக்கு சென்று தேர்வு நுழைவுசீட்டை வாங்கி வந்துள்ளார்.
பள்ளிக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் பேசாமல் தர்சினி அமைதியாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் வழக்கம்போல குடும்பத்தினர் உறங்கியுள்ளனர். வெயிலின் காரணமாக குடும்பத்தினர் வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், வீட்டிற்குள் சென்ற உதயதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிகாலை எழுந்த பெற்றோர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகளின் உடலை கட்டியணைத்து பெற்றோர்கள் கதறியழுத நிலையில், இவர்களின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருகையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy 15 year old girl suicide police investigation