கொய்யா மரங்களின் விளைச்சலைப் பெருக்க விவசாயிகளுக்கு பயிற்சி..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பன்னீர்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கான 
ஏற்பாடுகளை அலுவலர் இளங்கோ, உதவி அலுவலர்கள் சரவணகுமார், கருப்பசாமி, செண்பககுமார், வனிதா மாரி ஆகியோர் செய்தனர். 

இதற்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மலர் தலைமை தாங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தரராஜன் கொய்யா மரங்களில் விளைச்சலை பெருக்கவும், அதற்கான வழிமுறைகளையும் குறித்து விவசாயிகளிடம் பேசினார்.

மேலும், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், வேல்முருகன் கொய்யா சாகுபடி மேலாண்மை குறித்தும் பேசினார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் பதில் அளித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு விளைச்சலை பெருக்குவதற்கான வழிமுறைகையும் கற்று வந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Training for farmers to increase the yield of guava trees


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->