நெல்லையில் சோகம்!...நீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற மாணவி, களக்காட்டில் 12-ம் வகுப்பு படித்த நிலையில், கடந்த ஓராண்டாக அவர் நெல்லையில் தனியார் பயிற்சி மைய விடுதியில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.

முத்துலட்சுமி விடுதியில் தங்கி படித்ததால் செலவு அதிகமானதாக கூறப்படுகிறது. இதன் காரனமாக,  முத்துலட்சுமியின் தந்தை மணிகண்டன் அவரை  வீட்டில் இருந்து பயிற்சிக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

அந்த வகையில் முத்துலட்சுமி  தினமும் அதிகாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். அப்போது பயிற்சிக்கு செல்ல தாமதம் அவதாக கூறிய முத்துலெட்சுமி, மீண்டும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று  தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதற்கு அவரது தந்தை மணிகண்டன் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி நேற்று வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy in nellai student commits suicide due to lack of money for neet training


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->