குஷியில் சுற்றுலா பயணிகள்! 20000 கனஅடியாக அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து...!
Tourists in awe Water inflow from Okenakkal has increased to 20000 cubic feet.
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.இதன் காரணமாக கபினி அணைக்கும், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த இரு அணைகளில் இருந்தும் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 18000 கன அடியாக வந்தது.தற்போது இன்று காலை 8 மணி நிலவரப்படி 20000 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்த பின்னர் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.மேலும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Tourists in awe Water inflow from Okenakkal has increased to 20000 cubic feet.