சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்! 6-வது நாளாக குற்றாலத்தில் தடை நீடிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில், நேற்று தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டது. இதனால் காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த கனமழை பெய்தது.

அதுமட்டுமின்றி, நகர பகுதியிலும் மதியம் கனமழை பெய்தது. மேலும், பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

மீண்டும் நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது.இதனால் குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி  இன்று 6-வது நாளாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists disappointed Curfew extended for 6th day in Courtallam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->