இளைஞர்களே ரெடியா.? செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு 18 முதல் 40 வரை ஆகும்.  இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் களந்துகொள்ள வேண்டும்.

மேலும், நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள பயன்பெறுமாறும். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow mega employment camp in chengalpattu district


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->