கனமழை எதிரொலி: நாளை 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் காற்றழுத்த தாழ்வு ஒரு நாள் தாமதமாக 27ஆம் தேதி உருவாகுகிறது. மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகின்ற 29ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று, நாளை ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow 2 districts school holidays


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->