இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.!
today start pongal gift provide
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது.
டோக்கன் பெற்றவர்கள் வரும் 10 ஆம் தேதி அதாவது இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பயணாளர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். பயனாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கனில் எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதி நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
English Summary
today start pongal gift provide