நீண்ட இடைவேளைக்கு பிறகு நித்தியானந்தா.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சர்ச்சைகளுக்கு பெயர் போன தமிழகத்தை சேர்ந்த நித்யானந்தா, பாலியல் வன்கொடுமையால், ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது சீடர்களுடன் தலைமறைவாகியுள்ளார்.

கோவில் கட்ட நிதி என்று கூறி தன்னை நம்பிவந்தவர்களிடம் மோசடி செய்தும், அந்த பணத்தில் தனித் தீவு ஒன்று குத்தகை எடுத்து கைலாசா என்ற நாட்டை அறிவித்தார். இந்தியாவில் இருந்து தற்போது கைலாச நாட்டில் இருக்கும் நித்தியானந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

கடற்காற்று, இந்திய உணவு முறைகள் கிடைக்காததால் நித்தியானந்தா தொடர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். உடல் மெலிந்து சோர்வான நித்யானந்தருக்கு, கல்லீரல் அலர்ஜியும், சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உள்ளது. தற்போது நுரையீரல் தொற்று வரை சென்று மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வந்தார். 

இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நித்தியானந்தா இன்று நேரலையில் தோன்றுகிறார். உடல்நலக் குறைவு என தகவல்கள் வெளியான நிலையில், உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today nithyananda live


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->