கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!
Today holiday for Nilgiris district due to heavy rain
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தற்போது மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருவதால் இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Today holiday for Nilgiris district due to heavy rain