கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.!
Today holiday erode district Anthiyur thaluk due to heavy rain
கன மழை காரணமாக இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தியூர் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
Today holiday erode district Anthiyur thaluk due to heavy rain