தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல்... முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்கப்போகும் புதிய கட்டுப்பாடு.? - Seithipunal
Seithipunal


உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், ஒமைக்ரான் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டங்களை தீட்ட முன்வந்துள்ளது. இது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கலாம்.? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா.? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அறிவிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து ஆலோசிக்க பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today cm stalin meeting for omicron


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->