16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.!! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த வாரம் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற 21 மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார். 

இதனிடையே இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 16 fisherman arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->