தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளம்பாக்கத்தில் பிரமாண்ட பேருந்து முனையம் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கும், சென்னை மாநகருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. 

இதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்து ஆம்னி பேருந்துகளும், மற்ற அரசு பேருந்துகளும்  இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 710 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் செல்லும். 

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 160 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே விரைவுப்பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஈசிஆர், பூந்தமல்லி வழியாக செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்இடிசி ஆம்னி பேருந்துகள் ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் tharpothu டிஎன்எஸ்டிசி-ம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tnstc bus run in kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->