#BREAKING || ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு!
TNgovt raised teaching profession joining age limit
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நிலையில் அவர்கள் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதனை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது அரசு ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரையும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
English Summary
TNgovt raised teaching profession joining age limit