#BREAKING || ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நிலையில் அவர்கள் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதனை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது அரசு ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரையும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt raised teaching profession joining age limit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->