ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு! 12 ஆம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி போதுமானது!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசின் பொதுவிநியோக திட்டத்தின் படி அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள், மழை வெள்ள பாதிப்பு காலங்களில் தமிழக அரசின் சிறப்பு பரிசு, நிவாரண பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.  

நகர பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் சிலவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் பொருட்களையும் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகம்  முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4000 விற்பனையாளர்,  கட்டுனர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதில், விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும் என்றும், கட்டுனர் பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Ration Shop Job Announce 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->