கனமழை எச்சரிக்கை.! நாள் குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம்.!
TN RAIN ALERT OCT 17
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த அறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி முதல் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகம் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கையை, குமரி கடல், மன்னர் வளைகுடா, தென் கேரளா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.