அரசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு இனி முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: புதிய அரசாணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வுக்கான (Promotion Panel Guidelines) நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுப் புதிய அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

புதிய நெறிமுறைகள் & முதலமைச்சர் ஒப்புதல்
முதல்வர் ஒப்புதல் கட்டாயம்: இதுவரை துறைச் செயலாளர்கள், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் அமைச்சர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், இனி தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் நேரடி ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு பணிப்பதிவு ஆய்வு: பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படும் அதிகாரியின் முந்தைய 5 ஆண்டுகாலப் பணிப் பதிவுகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் முழுமையாகச் சரிபார்க்கப்படும்.

விதி 17 (b) கட்டுப்பாடு: கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ, தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்தாலோ தகுதிப் பட்டியலில் பெயர் சேர்ப்பது தள்ளி வைக்கப்படும். ஆனால், ஆரம்பக்கட்ட விசாரணைகள் தடையாக இருக்காது.

நிர்வாகத் தாமதத்தைத் தவிர்க்க நடவடிக்கை
காலிப்பணியிட மதிப்பீடு: காலிப்பணியிடங்கள் ஏற்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அதற்கான மதிப்பீடுகளை அரசுக்கு அனுப்ப வேண்டும்.

ஓய்வுக்கு முன் பதவி உயர்வு: தகுதியான அதிகாரிகள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே அவர்களுக்குரிய பதவி உயர்வு ஆணை கிடைப்பதைத் துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Govt Mandates CM Approval for Bureaucrats Promotions Issues New Guidelines


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->