எஸ்.பி.,களுக்காக இனி காத்திருக்க வேண்டாம்... தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற செயல்கள் தொடர்புடைய வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாவட்ட எஸ்பிகளின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இதனால் வழக்கு பதிவு செய்ததிலும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலும் தொய்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்வதற்கு மாவட்ட எஸ்பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் என காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்ற வழக்குகளின் பதட்டமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பான தேவைக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். 

இதற்கு உயர் அதிகாரியின் அனுமதிக்காக ஆய்வாளர்கள் காத்திருக்க தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN DGP orders no need for SP approval to register FIR


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->