ஏப்ரல் ஆறாம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனவும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,

சட்டமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ந்டைபெறும் என்றும், அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்று  துறை ரீதியிலான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly session at april


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->