#BREAKING | தற்கொலை செய்த திருப்பூர் நீட் பயிற்சி மாணவி உயிரிழந்தார் - வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து அருகே உள்ள காமராஜர் சாலையில் தனியா நீட் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்துவந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தி என்ற 17 வயது மாணவி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார்.

நேற்று மாணவி பார்ப்பதற்காக அவரின் காதலன் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாணவி ஆனந்தியின் தந்தை, பயிற்சி மையத்துக்கு சென்று, மாணவியை கண்டித்து உள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி ஆனந்தி நீட் பயிற்சி மையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவியை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு மாணவி ஆனந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Neet Student suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->