திருப்பத்தூர் மாவட்டங்களில் அடிக்கடி நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி.!
Tirupattur District Mild Earthquake Peoples Complaint 17 April 2021
ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கொரட்டி, கந்தலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை, நாற்றம்பள்ளி, கந்தலி பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. கடந்த 11 ம் தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனைப்போன்று, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் நிலஅதிர்வுவை உணர்ந்ததாகவும் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், கடந்த முறை உணரப்பட்ட நிலநடுக்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பாக டெல்லியில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திடம் விளக்கம் கேட்டு கோரிக்கை வைத்திருப்பதாகவும், அது வந்தவுடன் தகவல் தெரிவிப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirupattur District Mild Earthquake Peoples Complaint 17 April 2021