சொந்த கட்சி நபரையே பொறாமையில் போட்டுத்தள்ளிய திமுக பிரமுகர்.. வள்ளியூரில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வள்ளியூர் பகுதியை சார்ந்தவர் முத்துராமன் (வயது 35). இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் வடக்கு வள்ளியூரில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் நேற்று இரவு வள்ளியூருக்கு வந்த உறவினரை காரில் ஏற்றி, தெற்கு வள்ளியூர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், இவரை இடைமறித்த கும்பலொன்று சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி சென்றுள்ளது.

இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், முத்துராமன் மற்றும் தெற்கு வள்ளியூர் பகுதியை சார்ந்த மற்றொரு முத்துராமன் (வயது 30), திமுகவில் இருந்தாலும் இரண்டு கோஷ்டியாக இருந்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், மோதலும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது. 

இதனால் முத்துராமன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையில் ஈடுபட்ட முத்துராமனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரது ஆதரவாளர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Valliyur DMK Party Member Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->