தூத்துக்குடியில் பரபரப்பு - சுங்கச் சாவடியில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் பரபரப்பு - சுங்கச் சாவடியில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து.!!

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலஅரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்றுச் சென்றது. இந்த லாரியை மணிகண்டன் என்பவர் மது போதையில் ஒட்டி சென்றுள்ளார். 

இதையடுத்து, இந்த லாரி தூத்துக்குடி-மதுரை சாலையில் உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, மது போதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய மணிகண்டன் முன்னாடி நின்று கொண்டிருந்த காரை இடித்து தள்ளியுள்ளார். அப்போது லாரி நிலை தடுமாறிய லாரி சுங்கச்சாவடியில் நிலக்கரியோடு கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடதிற்கு விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தினால், தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் சுங்கச்சாவடியில் இரண்டு கவுண்டர்கள் அடைக்கப்பட்டு இரண்டு கவுண்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் லாரி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tippar lorry accident in thoothukudi tolgate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->