கேளிக்கை விடுதியின் மேற்கூரை விழுந்து விபத்து - 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மதுபான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றும் வல்லுநர்களும் சம்பவ இடத்துக்கு வந்து, தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

மேலும், சென்னை கேளிக்கை விடுதி விபத்திற்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை- CMRL விளக்கம் அளித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 240 அடி தூரத்தில் தான் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died in club roof collapse in chennai aazhvarpettai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->