உயிரை குடித்த மின்சார கம்பி..!
three members of the same family died in electricity accident
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இந்திரா இவருக்கு வயது 52. இவர் எப்போதும் துணி துவைத்து வீட்டின் முன்புறம் உள்ள கம்பியில் காயவைப்பார். சம்பவத்தன்றும் இந்திரா வழக்கம் போல் துணிதுவைத்து காய வைத்துள்ளார். அப்போது அருகே இருந்த மின் கம்பியில் தவறுதலாக ஈர துணிபட்டுள்ளது. இதனால் இந்திரா மீது மின்சாரம் பாய்ந்த்து.
இந்நிலையில் அருகில் அவரது 3 வயது பேத்தி விளையாடி கொண்டிருந்தார் விவரம் அறியாத அந்த குழந்தை தனது பாட்டியை சென்று அணைத்துள்ளது. அதனால் குழந்தை மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட குழந்தையின் தாய் செய்வதறியாமல் குழந்தையை காப்பற்ற முயன்றுள்ளார். காப்பாற்ற முயன்ற அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
three members of the same family died in electricity accident