சென்னை நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியின் விடுதியில், நேற்று மதியம் அளவில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், மாணவி மர்மமான முறையில் இறந்ததாக சொல்லப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து திருவேற்காடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்கொலை செய்துகொண்ட மாணவி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்று, முதல் கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.

மேலும், மாணவி நேற்று மதிய உணவு இடைவெளியில் தனது அறைக்கு வந்தவர், தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. 

மாணவியின் தற்கொலைக்கு கடிதம் அல்லது ஆதாரங்கள் ஏதும் கிடைக்கிறதா? என்று, மாணவியின் செல் போன் மற்றும் அவரின் உடமைகளை நேற்று போலீசார் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruverkadu nursing student suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->